வவுனியா – கோவில்புதுக்குளத்தில் இன்று (25) பிற்பகல் 12 மணியளவில் வன்னிப் பிராந்திய விசேட போதை ஒழிப்பு பிரிவினரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு உள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 35000 மில்லிலீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் விசாரணைகளின் பின்னர் நாளை (26) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.